Homeசெய்திகள்ஆவடிஆவடி: சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகள் கொட்டகையில் அடைப்பு

ஆவடி: சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகள் கொட்டகையில் அடைப்பு

-

ஆவடி மாநகராட்சியில் சாலைகளில் சுற்றித்திரிந்த கால்நடைகளை, போக்குவரத்து காவலர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து மாநகராட்சி மாட்டு கொட்டகையில் அடைத்தனர்.ஆவடி: சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகள் கொட்டகையில் அடைப்புசென்னையில் கடந்த சில மாதங்களாக சாலையில் நடந்து செல்பவர்களை மாடுகள் முட்டும் சம்பவம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதன் ஒரு பகுதியான ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட கோவர்த்தனகிரி, ஆவடி மார்க்கெட், ஆவடி பேருந்து நிலையம் மற்றும் திருமுல்லைவாயில் போன்ற பகுதிகளில் ஆவடி மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் மொய்தீன் மற்றும் ஆவடிபோக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆப்பிரகாம் அவர்கள் தலைமையில் 30க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்களும் போக்குவரத்துக் காவலர்களும் இணைந்து சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து ஆவடி மாநகராட்சி மாட்டுத் தொழுவத்தில் அடைத்தனர்.

https://www.apcnewstamil.com/news/avadi/1-5-year-old-girl-dies-in-avadi/95735

பின்பு மாட்டினை உரிமை கோரி வரும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார். பின்பு உரிமை கொண்டாட இயலாத கால்நடைகளை திருவள்ளூரில் அமைந்துள்ள கோ சாலையில் அடைக்கப்படும் என்று தெரிவித்தனர்.

களப்பணியில் ஆவடி போக்குவரத்து உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் சக போக்குவரத்து காவலர்களும் மாநகராட்சி ஊழியர்களும் உடன் இருந்தனர்.

MUST READ