Homeசெய்திகள்ஆவடிஆவடியில் காதல் தகராறில் காவலர் தூக்கிட்டு தற்கொலை!

ஆவடியில் காதல் தகராறில் காவலர் தூக்கிட்டு தற்கொலை!

-

ஆவடி அருகே காதலர் தகராறில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சக காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

ஆவடி அடுத்த சத்தியமூர்த்தி நகர் பகுதியில் அமைந்திருக்க கூடிய காவலர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் விக்னேஷ்-27 மணலி பகுதியில் அமைந்திருக்கும் உதவி ஆணையாளர் அலுவலகத்தில் எழுத்தர் பணியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நேற்றிரவு 10மணியளவில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக திருமுல்லைவாயல் காவல் நிலையத்திற்கு தகவல் வந்துள்ளது, தகவல் அறிந்து வந்த திருமுல்லைவாயில் காவல்துறையினர் விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்னவென்று வழக்குப்பதிந்து திருமுல்லைவாயில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

விசாரணையில் விக்னேஷ் கடந்த ஓராண்டு காலமாக தனிமையில் இருந்து வந்ததாகவும் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகவும் சமீபகாலமாக அதே காவலர் குடியிருப்பில் வசிக்கக்கூடிய பெண் காவலரான பமிலா ப்ரீத்தி-25 என்பவரோடு பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததாகவும் இருவருக்கும் வருகிற மே மாதம் திருமணம் நடைபெற உள்ளதாகவும், இந்நிலையில் ப்ரீத்தி குடும்ப தகராறு காரணமாக சொந்த ஊருக்கு சென்றதாகவும் மேலும் அங்கிருந்து விக்னேஷ் உடன் தொலைபேசியில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி விக்னேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் என காவல்துறை தரப்பில் தகவல் அளித்துள்ளனர்.

MUST READ