Homeசெய்திகள்ஆவடிஆவடி அருகே ரயில்வே ஊழியர் தூக்கிட்டு தற்கொலை!

ஆவடி அருகே ரயில்வே ஊழியர் தூக்கிட்டு தற்கொலை!

-

ஆவடி அருகே திருமுல்லைவாயலில் குடும்ப பிரச்சனை காரணமாக ரயில்வே ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், சிவசக்தி நகர், 60 அடி சாலையில் வசிப்பவர் சுராஜ் குமார் (29) சென்னை ஒன்றிய அரசு நிறுவனமான ஐ.சி.எப். தொழிற்சாலையில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவருக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன் திருமணம் நடந்துள்ளது. மனைவி ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள நிலையில், இங்கு நண்பர்களுடன் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து வந்து நண்பர்கள் கதவை தட்டியபோது, சுராஜ் குமார் வெகு நேரமாக கதவை திறக்கவில்லை என கூறப்படுகிறது.

சந்தேகத்தின் பேரில், அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சுராஜ் குமார், வீட்டில் உள்ள பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நண்பர்கள் அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளித்த நிலையில், அங்கிருந்து பெரம்பூர் ரயில்வே மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுராஜ் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த திருமுல்லைவாயில் போலீசார், அவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் காவல்துறை விசாரணையில், குடும்ப பிரச்சனை காரணமாக சுராஜ் குமார் தற்கொலை செய்தது தெரியவந்தது.

 

MUST READ