Homeசெய்திகள்ஆவடிமழை நீரால் மூழ்கிய ஆவடி சேக்காடு சுரங்கப்பாதை...!

மழை நீரால் மூழ்கிய ஆவடி சேக்காடு சுரங்கப்பாதை…!

-

ஆவடி சேக்காடு பகுதியில் புதிதாக மக்கள் பயன்பாட்டிற்கு ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது இந்த சுரங்க பாதையில் கோபாலபுரம் சேக்காடு தென்றல் நகர் வி.ஜி.என். குடியிருப்பு போன்ற பகுதிகளில் குடியிருக்கும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த சுரங்க பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

மழை நீரால் மூழ்கிய ஆவடி சேக்காடு சுரங்கப்பாதை...!மழைக்காலம் என்றாலே இந்த சுரங்கப்பாதை நீரால் மூழ்கி காட்சியளிக்கும் நிலை ஏற்படுகிறது இதனால் இப்பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் பள்ளி செல்லும் குழந்தைகள்  வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் சரியான நேரத்தில் செல்ல முடியாமல் காலதாமதம் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது.

மழை நீரால் மூழ்கிய ஆவடி சேக்காடு சுரங்கப்பாதை...!இந்த சுரங்கப் பாதையில் தேங்கி இருக்கக்கூடிய நீரை வெளியேற்றுவதற்காக நீர் இறைக்கும் ராட்சத மின்மோட்டார்கள் ஆவடி மாநகராட்சியால் அருகாமையில் அமைக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுகிறது நீர் குறைந்த அளவே வெளியேறுவதால் கூடுதல் ராட்சத மின்மோட்டார்கள் அமைத்திடவும், சென்னை மற்றும் திருத்தணி நெடுஞ்சாலையில் தேங்க கூடிய நீர் முழுவதும் இந்த சேக்காடு சுரங்கப்பாதையில் செல்வதால் விரைவில் சுரங்கப்பாதை நீரால் நிரம்பி விடுகிறது சிடிஎச் சாலையில் செல்லக்கூடிய மழை நீரை மாற்று பாதையில் கொண்டு செல்லவும் புதிதாக கூடுதல் ராட்சத நீர் இறைக்கும் மின்மோட்டார்கள் அமைத்திடவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை முன் வைத்துள்ளனர்…

MUST READ