Homeசெய்திகள்ஆவடிஆவடி - IT பார்க் 3ஆவது மாடியில் இருந்து பெண் விழுந்து பலி

ஆவடி – IT பார்க் 3ஆவது மாடியில் இருந்து பெண் விழுந்து பலி

-

பட்டாபிராம் IT பார்க் கட்டிடத்தில் திண்டிவனத்தை சேர்ந்த வளர்மதி (50) என்பவர் சித்தாள் வேலை செய்து வருகிறார்.

ஆவடி - IT பார்க் 3ஆவது மாடியில் இருந்து பெண் விழுந்து பலி

நேற்று மதியம் 3ஆவது மாடியில் சுவரில் துளை அடைத்து கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது எந்த வித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், எச்சரிக்கையும் இல்லாமல் இருந்த லிஃப்ட் காக போடப்பட்ட கதவு திறந்து கொண்டதால் 3 வது மாடியில் இருந்து கீழே விழுந்தார்.

 

இதில் அப்பெண் மயக்கமடைந்த நிலையில் 3 மணி நேரம் கழித்து கம்பெனி வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

 

ஆவடி - IT பார்க் 3ஆவது மாடியில் இருந்து பெண் விழுந்து பலிஆவடி மருத்துவனையில் சோதித்த மருத்துவர்கள் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். உடலை கைப்பற்றிய பட்டாபிராம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விபத்து குறித்து பட்டாபிராம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ