Homeசெய்திகள்ஆவடிCRPF தேர்வில் ஆள்மாறாட்டம் - வடமாநில இளைஞர் கைது

CRPF தேர்வில் ஆள்மாறாட்டம் – வடமாநில இளைஞர் கைது

-

ஆவடியில் CRPF பணியாளர்களுக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

CRPF தேர்வில் ஆள்மாறாட்டம் - வடமாநில இளைஞர் கைது

மத்திய அரசுக்கு சொந்தமான பாதுகாப்பு படை துறைகளில் ஒன்றான CRPF மையம் ஆவடியில் செயல்பட்டு வருகிறது. இங்கு CRPF துறையில் தூய்மை பணியாளர், சமையலர், ஓட்டுநர், மெக்கானிக், தோட்ட வேலை செய்பவர் உள்ளிட்ட GRADE – D பிரிவுகளில் ஆட்கள் தேர்வு நடைபெற்றது.

இதற்காக கடந்த 2023 ஆம் ஆண்டில் எழுத்து தேர்வு நடைபெற்று முடிந்தது. இந்த எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்விற்கு அழைப்பு விடுக்கப்பட்டு, கடந்த 10 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை உடற்தகுதி தேர்வு நடைபெற உள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் உடற்தகுதி தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக CRPF அதிகாரிகளால் ஒரு வடமாநில இளைஞர் பிடிபட்டுள்ளார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர் மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த கரன்சிங் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே பெயரில் ஒருவர் தூய்மை பணியாளர்களுக்கு தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றுள்ளார். இதை தொடர்ந்து இன்று நடைபெறும் உடற்தகுதி தேர்விற்கு கரன்சிங் எனும் பெயர் கொண்ட தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபர் கலந்துகொண்டுள்ளனர்.

CRPF தேர்வில் ஆள்மாறாட்டம் - வடமாநில இளைஞர் கைது

தேர்வு துவங்குவதற்கு முன் அதிகாரிகள் பயோமெட்ரிக் மூலம் கைரேகை பதிவுகளை மேற்கொண்டபோது, பிடிபட்ட நபரின் புகைப்படம் இல்லாமல் இதற்குமுன் தேர்வு எழுதிய நபரின் புகைப்படம் இருந்துள்ளது. இதன் காரணமாக அவரிடம் நடத்திய விசாரணையில் ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்துள்ளது.

இதன் பின்னர் CRPF அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் ஆவடி டேங்க் ஃபேக்டரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞர் கரன்சிங்கிடம் இதில் வேறு யாருக்கு தொடர்பு உள்ளது, யாருக்காக ஆள்மாறாட்டம் செய்தார், இதற்காக பணம் எதும் பெறப்பட்டுள்ளதா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆளுநர் பதவிக்காலம்  முடிவு – மீண்டும் நீட்டிக்க மத்திய அரசு திட்டம்!

மத்திய அரசு பாதுகாப்பு படை தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ