- Advertisement -
ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணிநிறைவு விழா நேற்று 30.11.2023 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் T7 டேங்க் ஃபேக்டரி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் R.K.ராஜேந்திரன் மற்றும் M4 செங்குன்றம் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் T.வெங்கடேசன் ஆகியோர்க்கு ஆவடி காவல் ஆணையாளர் அவர்கள் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்கள்.