கள்ள சந்தையில் மது விற்றால் கடும் நடவடிக்கை – ஆவடி காவல் ஆணையாளர்
ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு அனுமதித்த நேரம் தவறி மதுபானங்கள் கள்ள சந்தையில் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட திருமுல்லைவாயலில் 2-வது பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் பொதுமக்களிடம் நேரடியாக புகார் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசு அனுமதித்துள்ள நேரங்களை தவிர கள்ள சந்தையில் மது விற்பனை நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.