Homeசெய்திகள்சென்னைசென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இன்று 28 மின்சார ரயில்கள் சேவை ரத்து!

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இன்று 28 மின்சார ரயில்கள் சேவை ரத்து!

-

- Advertisement -

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையிலான 28 மின்சார ரயில்கள் சேவை இன்று தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூா், அரக்கோணம் ஆகிய நகரங்களுக்கு தினமும் அதிகாலை 3.50 மணி முதல் இரவு 11.59 மணி வரை 200-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. முக்கிய நேரங்களில் 5 முதல் 10 நிமிஷத்துக்கு ஒரு ரயிலும், பிற நேரங்களில் 20 முதல் 25 நிமிஷத்துக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகின்றன.

train

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் ரயில்வே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இன்று முதல் இரு மாா்க்கமாகவும் 28 மின்சார ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அதன்படி சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் 14 ரயில்களும், தாம்பரம் – சென்னை கடற்கரை வழித்தடத்தில் 14 ரயில்களும் என மொத்தம் 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மின்சார ரயில்

இதனால், சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை இயக்கப்படும் மற்ற ரயில்கள் வழக்கமாக இயக்கப்படும் நேரத்துக்கு பதிலாக 5 முதல் 10 நிமிஷம் தாமதமாக இயக்கப்படும். சில ரயில்களின் நேரம் முற்றிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக 15 முதல் 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயங்கும் வகையில் மின்சார ரயில் அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

MUST READ