2025 மார்ச் மாதத்தில் 92.10 லட்சம் பேர் பயணிகள் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிா்வாகம் தகவல் அளி்த்துள்ளது.
சுமாா் 92.10 லட்சம் பயணிகள் 2025 மார்ச் மாதத்தில் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியையும், நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியையும் வழங்கி வருவதோடு மட்டுமல்லாமல், 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 92,10,069 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தொிவித்துள்ளது.
நடப்பாண்டில் ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 07.03.2025 அன்றைய தினத்தில் அதிகபட்சமாக 3,45,862 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளாா்கள். 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தியும், 9,81,849 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தியும், 9,492 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தியும் 280 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தியும், 39,65,992 பயணிகள் (Online QR 1,59,364; Paper QR 19,41,919; Static QR 2,89,959; Whatsapp – 5,84,041; Paytm 4,46,116; PhonePe – 3,60,001; ONDC – 1,84,592), சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தியும், ஆக மொத்தம் 42,52,456 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளாா்கள்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), Whatsapp, Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்கி வருகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாகவும் மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம். மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தினா் நன்றி தெரிவித்துள்ளாா்கள்.
ஆர்எஸ்எஸ் :‘இந்தியாவின் அழியாத கலாசாரத்தின் ஆலமரம்’- பிரதமர் மோடி புகழாரம்