Homeசெய்திகள்சென்னைஇரத்த தானம் செய்தார் நடிகர் சூர்யா

இரத்த தானம் செய்தார் நடிகர் சூர்யா

-

ரசிகர்களைப் போலவே ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்ததானம் செய்ய உள்ளேன் என கடந்த ஆண்டு எடுத்துக்கொண்ட உறுதி மொழியின் பெயரில், நடிகர் சூர்யா இன்று ரத்த தானம் செய்தார்!

இரத்த தானம் செய்தார் நடிகர் சூர்யாநடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வடசென்னை தெற்கு மாவட்டம் சூர்யா நற்பணி மன்றம் சார்பில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்றைய தினம் 400 க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.

ரசிகர்களின் இந்த சேவையை பாராட்டி நடிகர் சூர்யாவும் வீடியோ கால் மூலமாக இணைந்து ரசிகர்களை வெகுவாக பாராட்டினார்.

இரத்த தானம் செய்தார் நடிகர் சூர்யாஇந்நிலையில்  கடந்த ஆண்டு சென்னையில்  200க்கும் மேற்பட்டோரும் தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும்  தனது பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தானம் வழங்கினர். அவர்களை நேரில் அழைத்து விருந்தளித்து பாராட்டிய நடிகர் சூர்யா இனி ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்த தானம் செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தார்.  அதன் அடிப்படையில் நேற்று ரசிகர்கள் ரத்த தானம் செய்த நிலையில்,  இன்று அவர் ரத்த தானம் செய்து ரசிகர்களுக்கும் நடிகர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார்.

MUST READ