Homeசெய்திகள்சென்னைசென்னையில் 3 நாட்கள் மெட்ரோ ரயில்கள் கூடுதலாக இயக்கம்

சென்னையில் 3 நாட்கள் மெட்ரோ ரயில்கள் கூடுதலாக இயக்கம்

-

- Advertisement -

கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னையில் அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 2 நாட்கள் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், கனமழையின் காரணமாக, பயணிகளின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நாளை முதல் வரும் 17ஆம் தேதி வரை கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், மேற்குறிப்பிட்ட 3 நாட்களும் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Metro Train - மெட்ரோ ரயில்

சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என்றும், விம்கோ நகர் பணிமனை மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், வண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இடையே 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

MUST READ