பேரறிஞர் அண்ணா அவர்களின்115வது பிறந்தநாளையொட்டி திமுக சார்பில் சென்னையில் உள்ள அவரது உருவ படத்திற்கும்,உருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு தினத்தையொட்டி இன்று சென்னை கோட்டயத்தில் உள்ள அவரது உருவ படத்திற்கும் ,சிலைக்கும் திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அதில் ஏராளமான கட்சி தொண்டர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு அண்ணா அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
பெரியாரின் தம்பி – கலைஞரின் அண்ணன் – முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டி, ‘தம்பி’ எனும் ஒற்றை சொல்லில் தி.மு.கழகம் எனும் கோட்டையை கட்டி எழுப்பிய பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்த நாளான இன்று, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அண்ணா அவர்களின் திருவுருவப்படத்துக்கு மலர்தூவி, திருவுருவச் சிலைக்கு கழக நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். பேரறிஞர் அண்ணா வழியில் மாநில சுயாட்சி காக்க அயராது உழைப்போம்.இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் .