- Advertisement -
சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசு வெடிக்க காவல்துறை தடை விதித்துள்ளது. 19,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
மொத்தம் 425 இடங்களில் வாகன தணிக்கை குழுக்குகள் செயல்படும். வாகன பந்தயத்தை தவிர்க்க 30 சோதனை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கியமான கோயில்கள், தேவாலயங்கள், இதர வழிபாட்டுதலங்கள், பொது இடங்களில் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.