- Advertisement -
சென்னையில் பேருந்து- லாரி மோதி பயங்கர விபத்து
சென்னை வேலப்பன்சாவடியில் இன்று அதிகாலை, பேருந்து-லாரி ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், 2 வாகனங்களும் தீப்பிடித்து எரியத் தொடங்கின.
சென்னை வேலப்பன்சாவடியில் இன்று அதிகாலை, பேருந்தும், லாரியும் நேருஜ்கு நேர் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. கர்நாடகாவில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்த A/C பேருந்து வேலப்பன்சாவடி சந்திப்பில் லாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். விபத்தில் சிக்கிய இரு வாகனங்களும் மோதியதில் தீப்பற்றி எரிந்தன.
பேருந்தில் இருந்த 22 பயணிகளும் பின் பக்க கண்ணாடியை உடைத்து இறங்கியதால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். தகவலறிந்த உடன் பூவிருந்தவல்லி, மதுரவாயல் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அனைத்து வருகின்றனர். விபத்து காரணமாகச் சென்னை-பெங்களூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர்.