Homeசெய்திகள்சென்னைதீபாவளி பாதுகாப்பு ஏற்பாடு - ரயில்வே எஸ் பி ஆய்வு…!

தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடு – ரயில்வே எஸ் பி ஆய்வு…!

-

- Advertisement -

சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு் சென்ட்ரல், எழும்பூர், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் ரயில்வே எஸ்.பி ஆய்வு.

தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடு - ரயில்வே எஸ் பி ஆய்வு…!தீபாவளி பண்டிகையை முன்னிட்டு் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு ரயில்வே காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் நவம்பர் 5 முதல் 11 வரை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள்

ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவது, பயணிகளை வரிசையாக நிற்க வைத்து முன்பதிவு இல்லாத பெட்டிகளில் ஏற்றி விடுவது, தீபாவளி திருடர்களை கண்காணிப்பது, பட்டாசு கொண்டு செல்கிறார்களா என கண்காணித்து நடவடிக்கை எடுப்பது என தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் நேரில் ஆய்வு செய்தார். இதே போல் பெரம்பூர், எழும்பூர் ரயில் நிலையங்களிலும் ஆய்வு மேற்கொண்டார்.

MUST READ