சென்னை காவல்துறையின் இசைக்குழுவின் இசைநிகழ்ச்சி இனி வாரம் தோறும் சனிக்கிழமை அன்று மெரினா கடற்கரையில்….
சென்னை காவல்துறையின் இசைக்குழுவினர் இனி வாரம் தோறும் சனிக்கிழமையன்று இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர். அதன்படி, இன்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். நிகழ்ச்சி தொகுப்பினை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது;
மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் சென்னை காவல்துறையின் இசைக்குழுவினர் இனி வாரம்தோறும் சனிக்கிழமையன்று இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர்.
முறையாக பயிற்சி பெற்றுள்ள காவல்துறை இசைக்கலைஞர்கள், நேர்த்தியான இசையை வழங்கியதை கேட்டு ரசித்தோம்.
இந்தியாவிலேயே முதல்முறையாக காவல்துறை சார்பில் பொது இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்துவது இதுவே முதல் முறையாகும். இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த சென்னை பெருநகர காவல்துறையினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.