சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.57,800-க்கு விற்பனையாகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.2,320க்கு உயர்ந்துள்ளதால் சாமானிய மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, 57 ஆயிரத்து 160-க்கு விற்பனையானது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று சவரனுக்கு அதிரடியாக ரூ.640 உயர்ந்துள்ளது. இதனால் கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.640 உயர்ந்து, ரூ.57,800-க்கு விற்பனையாகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.80 அதிகரித்து, ரூ.7,225க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலையில் மாற்றம் இன்றி கிராம் ரூ.101-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கும் வர்த்த்கமாகிறது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தங்கம் விலை மேலும் அதிகரிக்கலாமே தவிர, தற்போதைக்கு குறைவதற்கான சாத்தியங்கள் குறைவு என்று தங்க நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வரும் நாட்களில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்கம் வாங்குவது கனவாகிடும் போல் உள்ளது.