சட்டபேரவையில் தங்களது துறை மீதான மானிய கோரிக்கைகள் நடைபெற உள்ளதால் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மறைந்த முதலமைச்சர் கலைஞர் மற்றும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.சென்னை தலைமைச்செயலகத்தில் இன்றயை சட்டபேரவை கூட்டத்தொடரில் தமிழ் வளர்ச்சி துறை மற்றும் மனித வள மேலாண்மை துறை மீதான மானிய கோரிக்கைகள், விவாதங்கள் மற்றும் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் கயில்விழி செல்வராஜ் ஆகியோர் வெளியிட உள்ளனர்.
முன்னதாக தனது துறைகள் மீதான மானிய கோரிக்கைகள், விவதாங்கள் நடைபெற உள்ளதால், மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் கயில்விழி செல்வராஜ் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். உடன் ஏராளனமான நிர்வாகிகள் இருந்தனர்.
https://www.apcnewstamil.com/news/chennai/distribution-of-cold-drinks-to-relieve-the-scorching-heat-thiruvottriyur-mla/15952