வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் உத்தரவின் படி அடையாறு கால்வாயை ககன் தீப் சிங் பேடி ஆய்வு செய்துள்ளார்.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அடையாறு கால்வாயை வருவாய் மற்றும் இணைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் பொன்னையா உள்ளிட்டோர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் செல்லும் கால்வாய் மற்றும் அடையாறு கால்வாய்களை கூடுதல் தலைமைச் செயலாளர் ககந்தீப் சிங் பேடி மற்றும் ஊராகத் வளர்ச்சித்துறை செயலாளர் பொன்னையா ஆய்வு செய்துள்ளனர்.அப்போது அங்கிருந்த நீர்வளத்துறை அதிகாரிகளுடன் கால்வாய் குறித்து கேட்டரிந்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியுள்ளது.வடகிழக்கு பருவமழையை ஒட்டி முதலமைச்சர் உத்தரவின் படி அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து பணிகளை தொடங்கியுள்ளனர் எனவும் திருமுடிவாக்கத்தில் அடையாறு செல்லும் பாதையில் கால்வாய் வடிகால் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது எனவும் முழுமை அடைந்த கால்வாய் வடிகால் பணிகளை ஆய்வு செய்ய நேரில் வந்துள்ளோம் என தெரிவித்துள்ளார். செம்பரம்பாக்கத்தில் இருந்து திறக்கப்படும் நீர் அடையாறில் நிரம்பி வெளியேறும் பகுதியில் இந்த வடிகால் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் முடிவடைந்த வடிகால் பயனளிக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.