கேரளாவை விட சென்னையில் ஓணம் பண்டிகை அதிக உற்சாகத்துடன் கொண்டாடுவதாக மலையாள பெண்கள் மகிழ்ச்சி.
திருவொற்றியூரில் வடசென்னை மலையாளி சங்கத்தின் சார்பில் செண்டை மேளம் முழங்க திரு நடனமாடி உற்சாக கொண்டாட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை 15ம் தேதி கேரள மக்களின் திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி வடசென்னை மலையாளி சங்கத்தின் சார்பில் திருவொற்றியூர் பெரியார் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மலையாள பெண்கள் அத்தப்பூ கோலமிட்டு கேரளா செண்டை மேளம் முழங்க திருவாதிரை நடனம் ஆடினர்.
கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை.
ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம் நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் பல பகுதிகளில இருக்கும் கேரள மக்கள், ஓணம் பண்டிகைக்கு தங்கள் சொந்த மாநிலத்துக்கு வந்து உறவினர்களுடன் மகிழ்ச்சியாக ஓணம் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். இந்த பண்டிகை ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திர நாளில் தொடங்கி சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் ஆகிய 10 நட்சத்திரங்கள் வரும் நாட்களில் விமரிசையாக கொண்டாடப்படும்.
பெண்கள் விதவிதமான வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர்
மகாபலி ராஜாவை பூவுலகுக்கு வரவேற்கும் விதமாக பூக்களால் தோரணம் கட்டி மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். ஓணம் பண்டிகை 15 தேதி அன்று வீட்டில் கொண்டாடப்படுவதால் வடசென்னை மலையாளி அசோசியேசன் சார்பில் கேரள நாட்டில் சமைக்கும் பாலக்காடு மட்டை அரிசி, நேந்திரம் சிப்ஸ், கேரளா அப்பளம், ஏலக்காய், பாசிப்பருப்பு, வெல்லம், சர்க்கரை, காய்கறிகள் உள்ளிட்ட 21 வகையான உணவுப் பொருட்களை 1000 பேருக்கு வழங்கப்பட்டன.
ஜாதி மத வேறுபாடு இன்றி தமிழர்களுடன் கேரளா மாநிலத்திலேயே விட சென்னையில் அதிக உற்சாகத்துடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதாக தெரிவித்தனர். பத்து வகையான பூக்களை கொண்டு விதவிதமான வண்ண மலர்களால் கேரளா நாட்டில் அத்தப்பூ கோலம் ஈடுவார்கள். ஆனால் அது போன்று அதிக பூக்கள் சென்னையில் கிடைக்காததால சென்னையில் கிடைக்கும் பூக்களை கொண்டு வண்ண வண்ண மலர்களால் விதவிதமான அத்தப்பூகோலம் போட்டு கொண்டாடுகின்றனர்