Homeசெய்திகள்சென்னைசென்னை விமான நிலையத்தில் தெரு நாய்கள் அட்டகாசத்தால் பயணிகள் அச்சம்

சென்னை விமான நிலையத்தில் தெரு நாய்கள் அட்டகாசத்தால் பயணிகள் அச்சம்

-

சென்னை விமான நிலையத்தில் தெரு நாய்கள் அட்டகாசத்தால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம். வெறி நாய்களை குச்சியை வைத்து விரட்ட 18,000 ஊதியம் கொடுத்து ஆட்களை வேலைக்கு அமர்த்திய விமான நிலைய அதிகாரிகள்.

 

சென்னை விமான நிலையத்தில் தெரு நாய்கள் அட்டகாசத்தால் பயணிகள் அச்சம்சென்னை உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையத்தில் சமீபகாலமாக, தெரு நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, விமான நிலைய வளாகத்தில் 20திற்க்கும் அதிகமான வெறிபிடித்த தெரு நாய்கள் உலா வருகின்றன.

விமான நிலையத்திற்குள் உலாவரும் இந்த நாய்களின் கூட்டம் இரண்டு மூன்று டீம் ஆக பிரிந்து பயணிகளால் வீசப்படும் உணவு பொருட்களை சாப்பிட்டு விட்டு விமான நிலையத்தில் தஞ்சம் அடைந்து வருகிறது.

உணவுகளை தேடும் நாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிடுவதை பார்க்கும் பயணிகள் எங்கு நம்மையும் கடித்துவிடுமோ என்ற அச்சத்தில் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடிக்கின்றனர்.

குறிப்பாக கார் பார்க்கிங், விமான நிலைய போர்டிகோ மற்றும் பயணிகள் ஓய்வெடுக்கும் பகுதி போன்ற பகுதிகளில் நாய்களின் அட்டகாசம் அதிகரித்து வருகின்றது, சில நேரங்களில் பாதுகாப்பு படையினரையும் மீறி, விமான நிலைய உள் வளாகத்திற்குள் செல்கின்றன பின்னர் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர் அவற்றை துரத்தி விடுவது வாடிக்கையாகி விட்டது.

 

தெரு நாய்களின் அட்டகாசத்தால், விமான பயணிகளுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து பயணிகள் விமான நிலைய அதிகாரியிடம் பலமுறை புகார் கொடுத்ததாக கூறப்படுகின்றது, ஆனால் நாய்களை முழுமையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் விமான நிலைய அதிகாரிகள் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை நாய்கள் கடிக்காமல் இருக்க 18ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்து மூன்று நபர்களை நியமித்து அவர்கள் கையில் ஒரு குச்சியை கொடுத்து வெறி நாய்கள் பயணிகளை கடிக்காமல் பத்திரமாக பார்த்துக் கொள்ள மட்டும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் தெரு நாய்கள் அட்டகாசத்தால் பயணிகள் அச்சம்

விமான நிலைய அதிகாரிகள் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுற்றி திரியும் வெறி நாய்களை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது..

MUST READ