Homeசெய்திகள்சென்னைவங்கி மூலம் ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை சம்பந்தப்பட்ட வங்கிதான், நுகர்வோருக்கு திருப்பி தர வேண்டும்...

வங்கி மூலம் ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை சம்பந்தப்பட்ட வங்கிதான், நுகர்வோருக்கு திருப்பி தர வேண்டும் – சென்னை நுகர்வோர்  நீதிமன்றம் அதிரடி

-

- Advertisement -

வங்கி மூலம் ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை சம்பந்தப்பட்ட வங்கிதான், நுகர்வோருக்கு திருப்பி தர வேண்டும் என சென்னை நுகர்வோர்  நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

வங்கி மூலம் ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை சம்பந்தப்பட்ட வங்கிதான், நுகர்வோருக்கு திருப்பி தர வேண்டும் - சென்னை நுகர்வோர்  நீதிமன்றம் அதிரடிசென்னை அயனாவரத்தைச் சேர்ந்த மதுமிதா, சென்னை வடக்கு நுகர்வோர் ஆணையத்தில் தாக்கல் செய்திருந்த  மனுவில், கடந்த 2023 ல் தனது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தபோது, மறுமுனையில் பேசிய நபர், மும்பை சைபர் கிரைம் போலீசில் இருந்து பேசுவதாகவும், தான் அனுப்பிய பார்சலில் போதைப்பொருட்கள் இருப்பதாக தெரிவித்தாக குறிப்பிட்டதாகவும்,

மேலும், தனது ஆதார் அட்டை போதைப்பொருள், ஆயுதங்கள் கடத்தல், கடன் மோசடி போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும், ஆதார் அட்டை மூலம் பல்வேறு வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சட்டவிரோதமான பண பரிவர்த்தனை எதுவும் நடந்துள்ளதா? என பார்க்கும்படியும் கூறியதாக தெரிவித்துள்ளார்.

பின்னர், தனது ஐசிஐசிஐ வங்கி கணக்கு விவரங்களை கேட்டு, வங்கி கணக்கில் இருந்து 19 லட்சத்து 91 ஆயிரத்து 687 ரூபாய் பணத்தை வேறொரு வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளதாகவும், தனது வங்கி கணக்கு விவரங்களை சரி பார்த்த பின்பு, இந்த பணம் திரும்ப அனுப்பப்படும் என அவர்கள் தெரிவித்தாக குறிப்பிட்டுள்ளார் .

பின்பு தான், மோசடி கும்பல் தன்னை ஏமாற்றியது தெரியவந்ததாகவும், வங்கி கணக்கில் 5 லட்சத்து 81 ஆயிரத்து 366 மட்டுமே இருந்தது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தான் வங்கிக்கு தனிநபர் கடன் கேட்டு விண்ணப்பித்ததாக  மோசடி கும்பல் தனது கணக்கை பயன்படுத்தி, கேட்டதால் வங்கி நிர்வாகம் 15 லட்சத்தை தனது வங்கி கணக்கில் வரவு வைத்திருப்பதும், அந்த பணத்தையும் சேர்த்து அந்த கும்பல் அபகரித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோசடி குறித்து வங்கி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் மோசடியில் ஈடுபட்ட கும்பலின் வங்கி கணக்கை முடக்கம் செய்யவோ அல்லது பணத்தை திரும்ப பெற்றுத்தரவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வங்கி கணக்கில் இருந்து மோசடி கும்பல் அபகரித்த பணத்தை திரும்ப  வழங்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை ஆணையத்தின் தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. மனுவை விசாரித்த ஆணையம்,  மனுதாரர் தனிநபர் கடன் கேட்டு விண்ணப்பிக்காத நிலையில் வங்கி நிர்வாகம் தானாகவே கடன் அனுமதித்தது சேவை குறைபாடு என தெரிவித்துள்ளது.

எனவே, மனுதாரருக்கு அனுமதிக்கப்பட்ட 15 லட்சத்து 4 ஆயிரத்து 101 ரூபாய் கடன் ரத்து செய்யப்படுவதாகவும், மோசடி கும்பலின் வங்கி கணக்கு விவரம் தெரிந்த போதும் பணத்தை திரும்ப பெற்று தருவதற்கு வங்கி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மனுதாரரின் வங்கி கணக்கில் இருந்து மோசடி கும்பல் அபகரித்த 4 லட்சத்து 87 ஆயிரத்து 586 ரூபாயை மனுதாரருக்கு திரும்ப வழங்க வேண்டும் என்றும், குறைபாடு, மன உளைச்சலுக்காக 2 லட்சமும், வழக்கு செலவுக்காக 10 ஆயிரமும் மனுதாரருக்கு வழங்க வேண்டும்  என உத்தரவிட்டுள்ளனர்.

MUST READ