Homeசெய்திகள்சென்னைமத்திய பட்ஜெட் எதிரொலி: மேலும் உயர்ந்த தங்கம் விலை!

மத்திய பட்ஜெட் எதிரொலி: மேலும் உயர்ந்த தங்கம் விலை!

-

- Advertisement -

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை எதிரொலியாக இன்று தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.360 உயர்ந்து, சரவன் ரூ.62,320க்கு விற்பனையாகிறது.

சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.61,960க்கு விற்பனையானது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,745 விற்பனையாகியது. இந்த நிலையில், மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஆபரணத்தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது.

புத்தாண்டு பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்! ஆனால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வு!

சென்னையில் இன்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு மேலும் ரூ.45 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7,790-க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.360 உயர்ந்து, சரவன் ரூ.62,320-க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலையில் மாற்றம் இன்றி கிராம்  ரூ.107க்கு விற்பனையாகிறது.

MUST READ