நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். துணிவு படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஒரு வருடங்கள் ஆகியும் அஜித் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாமல் இருப்பதால் ரசிகர்கள் பலரும் அஜித்தின் அடுத்த படத்திற்காக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஏற்கனவே பிரபல நடிகர் எஸ் ஜே சூர்யா அஜித்துக்கு வில்லனாக நடிப்பதாக தெரிவித்திருந்தார்.
அதாவது எஸ் ஜே சூர்யா இயக்குனராக திரைத்துறையில் தன் பயணத்தை தொடங்கிய போது அஜித் நடிப்பில் வாலி எனும் திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார். எஸ் ஜே சூர்யா இயக்கிய முதல் படமான வாலி திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்று தந்தது. அடுத்தடுத்து சில படங்களை இயக்கி வந்த எஸ் ஜே சூர்யா தற்போது நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ஹீரோவாகவும் வில்லனாகவும் கலக்கி வருகிறார் எஸ் ஜே சூர்யா. அதேசமயம் “மாதா பிதாவிற்கு பிறகு எனக்கு அஜித் சார் தான். நான் வாழும் சொகுசு வாழ்க்கை அவர் கொடுத்தது தான். அவரை வைத்து மீண்டும் படம் இயக்குவதை விட அவருக்கு வில்லனாக நடிக்கவே எனக்கு ஆசை” என்று தெரிவித்திருக்கிறார் எஸ் ஜே சூர்யா. எனவே எஸ் ஜே சூர்யாவின் ஆசை குட் பேட் அக்லி படத்தில் நிறைவேறுமா? என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். ஏற்கனவே குட் பேட் அக்லி படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் யார் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.