Homeசெய்திகள்சினிமா'சூர்யா 45' படப்பிடிப்பில் பிரபல நடிகைக்கு காயம்!

‘சூர்யா 45’ படப்பிடிப்பில் பிரபல நடிகைக்கு காயம்!

-

- Advertisement -

சூர்யா 45 படப்பிடிப்பில் பிரபல நடிகைக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.'சூர்யா 45' படப்பிடிப்பில் பிரபல நடிகைக்கு காயம்!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படம் சூர்யாவின் 45 வது படமாகும். எனவே இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 45 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி கே விஷ்ணு இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார். சாய் அபியங்கர் இந்த படத்துல இசை அமைக்கிறார். திரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'சூர்யா 45' படப்பிடிப்பில் பிரபல நடிகைக்கு காயம்!மேலும் நட்டி நடராஜ், யோகி பாபு, சுவாசிகா, ஷிவதா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குனர் ஆர் ஜே பாலாஜி இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை ஏற்கனவே பொள்ளாச்சி, சென்னை ஆகிய பகுதிகளை விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இந்த படத்திற்கு பேட்டைக்காரன் என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. 'சூர்யா 45' படப்பிடிப்பில் பிரபல நடிகைக்கு காயம்!இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை சுவாசிகாவிற்கு காயம் ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. அதாவது சூர்யா 45 சண்டைக் காட்சியில் நடிக்கும்போது தன்னுடைய இடது கையில் காயம் ஏற்பட்டிருப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். மேலும் ஓய்விற்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் இணைவார் என்று நம்பப்படுகிறது.

MUST READ