Homeசெய்திகள்சினிமாவிபத்தில் சிக்கிய பிரபல நடிகை..... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை….. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

-

பிரபல நடிகை ராஷ்மிகா விபத்தில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.விபத்தில் சிக்கிய பிரபல நடிகை..... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக வலம் வருபவர். அந்த வகையில் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் கால் தடம் பதித்து பிசியான நடிகையாக மாறியுள்ளார். கீதகோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் அல்லு அர்ஜுனின் புஷ்பா, விஜயின் வாரிசு, ரன்பீர் கபூரின் அனிமல் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல பெரிய படங்களில் நடித்து பெயர் பெற்றுள்ளார். அடுத்ததாக இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2, சல்மான்கானின் சிக்கந்தர், தனுஷின் குபேரா என பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து புதிய படம் ஒன்றிலும் நடிகை இருக்கிறார் ராஷ்மிகா. இந்நிலையில் தான் ராஷ்மிகா மந்தனாவிற்கு விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. விபத்தில் சிக்கிய பிரபல நடிகை..... அதிர்ச்சியில் ரசிகர்கள்!இது தொடர்பாக சமூக வலைதள பக்கத்தில், “நான் என் சமூக வலைதள பக்கத்தை பயன்படுத்தி ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. ஏனென்றால் எனக்கு சிறிய விபத்து ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மருத்துவரின் அறிவுரைப்படி ஒரு மாதம் ஓய்வில் இருந்தேன். தற்போது நலமுடன் இருக்கிறேன். என்னுடைய வேலைகளை சுறுசுறுப்பாக செய்து வருகிறேன். அனைவரும் முதலில் தங்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். வாழ்க்கை மிகவும் சிறியது. நாளை என்பது நிரந்தரம் இல்லை” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

MUST READ