Homeசெய்திகள்சினிமாவிரைவில் ஓடிடிக்கு வரும் 'ஆடு ஜீவிதம்'..... எப்போன்னு தெரியுமா?

விரைவில் ஓடிடிக்கு வரும் ‘ஆடு ஜீவிதம்’….. எப்போன்னு தெரியுமா?

-

பிரித்விராஜ் நடிப்பில் கடைசியாக குருவாயூர் அம்பல நடையில் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விரைவில் ஓடிடிக்கு வரும் 'ஆடு ஜீவிதம்'..... எப்போன்னு தெரியுமா?அதே சமயம் பிரித்விராஜ் மோகன்லால் நடிப்பில் எம்புரான் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இவ்வாறு பிசியான நடிகராகவும் இயக்குனராகமும் வலம் வரும் பிரித்விராஜ், ஆடு ஜீவிதம் எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்திற்காக கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் கடினமாக உழைத்தார் பிரித்விராஜ். இந்த படமானது பிரபல எழுத்தாளர் பென்யமின் எழுதிய கோட் டேஸ் என்ற நாவலை தழுவி உருவாக்கப்பட்டது. இதில் பிரித்விராஜ் உடன் இணைந்து அமலாபால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை இயக்குனர் பிளஸ்ஸி இயக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைத்திருந்தார். விரைவில் ஓடிடிக்கு வரும் 'ஆடு ஜீவிதம்'..... எப்போன்னு தெரியுமா?சர்வைவல் படமாக வெளியான இப்படம் கடந்த மார்ச் 28ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று கிட்டத்தட்ட 150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்நிலையில் இந்த படம் கடந்த மே மாதமே ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு சில காரணங்களால் ஓடிடி ரிலீஸ் தள்ளிப்போனது. அதைத்தொடர்ந்து சமீபத்தில் கிடைத்த தகவலின் படி ஆடு ஜீவிதம் திரைப்படம் வருகின்ற ஜூலை 19 நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.

MUST READ