போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் மகன் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையை டிசம்பர் 26 ம் தேதிக்கு தள்ளி வைத்து சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முகப்போ் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி மாணவா்களுக்கு கைப்பேசி செயலி மூலம் போதைபொருள்களை விற்பனை செய்ததாக கல்லூரி மாணவா்கள் 5 போ் ஜெ.ஜெ.நகா் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.
விசாரணையில், போதைப்பொருள் கடத்தலில் நட்கர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்குக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தையடுத்து, ஜெ நகர் போலீசார், துக்ளக்கை டிசம்பர் 4 ம் தேதி கைது செய்தனர்.துக்ளக்கின் ஜாமீன் கோரிய மனுவை அம்பத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி துக்ளக் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், தன்னிடம் போதைப் பொருட்கள் எதுவும் இல்லாத நிலையில் தான் கைது செய்யப்பட்டதாகவும், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாக கூறி ஜாமீன் வழங்க கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், மனு மீதான விசாரணையை டிசம்பர் 26ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
கூட்ட நெரிசலில் உயிரிழந்த பெண் விவகாரம்…. விசாரணைக்கு ஆஜரான அல்லு அர்ஜுன்!