Homeசெய்திகள்சினிமாதரம் தாழ்ந்து விமர்சிப்பவர்கள் மனநோயாளிகள்... நடிகர் சமுத்திரக்கனி அதிரடி பேச்சு...

தரம் தாழ்ந்து விமர்சிப்பவர்கள் மனநோயாளிகள்… நடிகர் சமுத்திரக்கனி அதிரடி பேச்சு…

-

தரம் தாழ்ந்து விமர்சிப்பவர்கள் மனநோயாளிகள் என்று நடிகர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகராக வலம் வருபவர் சமுத்திரக்கனி. தொடக்கத்தில் இயக்குநராக வலம் வந்த சமுத்திரக்கனி, தற்போது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர் ஹீராவாகவும் பல படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கு மொழியில் பல படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். மகேஷ் பாபு, அல்லு அர்ஜூன் உள்பட தெலுங்கின் உச்ச நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களில் சமுத்திரக்கனி வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார்.

அண்மையில் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த ரத்னம் திரைப்படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், அறிமுக இயக்குநர் இயக்கிய யாவரும் வல்லவரே திரைப்படத்திலும் நடித்திருந்தார். இத்திரைப்படம் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வௌியானது. இதைத் தொடர்ந்து ராமம் ராகவம் என்ற திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார்

 

இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட புதிய உணவகத்தின் திறப்பு நிகழ்ச்சியில் நடிகர் சமுத்திரக்கனி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மலையாள படம் ஒன்றில் நடித்துவருவதாக கூறினார். மேலும், திரையுலகில் ஒருவரை ஒருவர் மாறி மாறி தரம் தாழ்ந்து விமர்சனம் செய்பவர்கள் மனநோயாளிகள் என்று தெரிவித்துள்ளார். இதை கடந்து செல்ல வேண்டும் என்றும் சமுத்திரக்கனி தெரிவித்திருக்கிறார்.

MUST READ