Homeசெய்திகள்சினிமாவிஜய் தம்பிக்கு நேர்ந்த சோகம்... மனைவியின் பேட்டியால் வந்த பிரச்சனை...

விஜய் தம்பிக்கு நேர்ந்த சோகம்… மனைவியின் பேட்டியால் வந்த பிரச்சனை…

-

விஜய்யின் சகோதரரும், நடிகருமான விக்ராந்தின் மனைவி அளித்த பேட்டி, இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோலிவுட் நடிகர்களில் முக்கியமான நபர் விக்ராந்த். இவர் தளபதி விஜய்யின் சகோதரரும் ஆவார். இவர் பல குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தாலும், 2005-ம் ஆண்டு வெளியான கற்க கசடற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகினார். இதையடுத்து முத்துக்கு முத்தாக படத்தில் நடித்திருப்பார். இத்திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், படத்தில் அவரது நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது. இத்திரைப்படத்தை தொடர்ந்து விஷால் நடித்த பாண்டியநாடு, விஜய் சேதுபதி நடித்த கவண், உதயநிதி ஸ்டாலின் நடித்த கெத்து ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் விக்ராந்த் நடித்திருந்தார்

தற்போது விக்ராந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் லால் சலாம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். வரும் பிப்ரவரி மாதம் இத்திரைப்படம் வெளியாக உள்ளது. படத்தின் புரமோசன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன

இந்நிலையில், விக்ராந்தின் மனைவி அளித்த பேட்டி ஒன்று, அவரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அந்த வகையில் ஒரு பேட்டியில், விக்ராந்தின் மனைவி மானசாவே, அவரை வைத்து படம் செய்ய மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு முன்பாக விஜய் தொடர்பாக விக்ராந்த் அளித்த பேட்டியும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. தான் பல படங்களின் வாய்ப்பை இழந்ததற்கு விஜய் தான் காரணம் என்று தெரிவித்திருந்தார்.

MUST READ