Homeசெய்திகள்சினிமாஇந்தி படங்களை தமிழுக்கு கொண்டு வர ஆசை... நடிகை குஷ்பு விருப்பம்...

இந்தி படங்களை தமிழுக்கு கொண்டு வர ஆசை… நடிகை குஷ்பு விருப்பம்…

-

இந்தியில் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்களை தமிழுக்கு கொண்டுவர வேண்டும் என நடிகை குஷ்பு விருப்பம் தெரிவித்துள்ளார். 

1980 மற்றும் 90-களில் தமிழ் சினிமாவின் டாப் நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ. பல இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்து வந்தார். தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஒரு நடிகைக்கு கோவில் கட்டப்பட்டது என்றால் அது குஷ்புவுக்கு தான். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து இந்திய மொழிகளிலும் நடித்து பான் இந்தியா அளவில் சூப்பர் ஹிட் ஆனார் குஷ்பூ. ரஜினி, கமல், பிரபு, கார்த்திகக், சரத்குமார், விஜயகாந்த் என பல உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து புகழின் உச்சிக்கு சென்றவர்.
தெலுங்கிலும் டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இயக்குநர் சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்து கொண்ட குஷ்பு, அவ்னி சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். தற்போது, குஷ்பு முழு நேர அரசியல்வாதியாக மாறியுள்ளார். தற்போது அவரது தயாரிப்பிலும், அவரது கணவர் சுந்தர் சி இயக்கத்திலும் வெளியான திரைப்படம் தான் அரண்மனை 4. இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது.
அதேபோல, இத்திரைப்படம் இந்தியில் டப் செய்யப்பட்டு இன்று பாலிவுட்டிலும் வெளியானது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய குஷ்பு, இந்தியில் பெண்களின் பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்களை தமிழுக்கு கொண்டு வர ஆசைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், தமிழில் இது போன்ற திரைப்படங்களை ரசிக்கும் ரசிகர்கள் அதிகம் இல்லை என்றும் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

MUST READ