Homeசெய்திகள்சினிமாசோபிதா இத எப்படி நீ பொதுவெளியில போடலாம்... கடுப்பான ஐஸ்வர்யா லக்ஷ்மி!

சோபிதா இத எப்படி நீ பொதுவெளியில போடலாம்… கடுப்பான ஐஸ்வர்யா லக்ஷ்மி!

-

நடிகை சோபிதா துலிபாலா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உடன் எடுத்த ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியானது. இந்தப் பாகத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

பொன்னியின் செல்வன் 2 வெளியான முதல் நாளில் மட்டும் உலக அளவில் சுமார் 60 கோடி வரை வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா லட்சுமி நடித்த பூங்குழலி கதாபாத்திரம் இரண்டாம் பாகத்தில் அவ்வளவாக இடம் பெறவில்லை. இந்நிலையில் வானதியாக நடித்த நடிகை சோபிதா துலிபாலாவும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மியும் கேரவன் உள்ளே எடுத்த வீடியோவை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த போஸ்ட்டை பார்த்த ஐஸ்வர்யா லக்‌ஷ்மியும் “சோபிதா இதை நீ பப்ளிக்கா போஸ்ட் பண்ணியிருக்கக் கூடாது” என்றே கமெண்ட் செய்துள்ளார். இதை உண்மையில் அவர் கோபப்பட்டு கமெண்ட் செய்திருக்கிறாரா அல்லது விளையாட்டா என்று தெரியவில்லை.

MUST READ