Homeசெய்திகள்சினிமாபடப்பிடிப்பில் விபத்து... நடிகர் அஜய் தேவ்கன் காயம்...

படப்பிடிப்பில் விபத்து… நடிகர் அஜய் தேவ்கன் காயம்…

-

- Advertisement -

அகெய்ன் சிங்கம் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில், நடிகர் அஜய் தேவ்கன் காயம் அடைந்தார்.

கோலிவுட்டில் சூர்யா மற்றும் ஹரி கூட்டணியில் வெளியாகி மெகாஹிட் அடித்த திரைப்படம் சிங்கம். ஆக்‌ஷன், அதிரடி கதைக்களத்தில் வெளியான சிங்கம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து சிங்கம் பாகம் இரண்டு மற்றும் மூன்று வெளியானது. மூன்று பாகங்களிலும் சூர்யா, அனுஷ்கா ஜோடிகளாக நடித்திருப்பார்கள். சிங்கம் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. சூர்யா வேடத்தில் அஜய் தேவ்கன் நடித்திருப்பார். ரோஷித் ஷெட்டி இப்படத்தை இயக்கியிருந்தார். சிங்கம் படத்தை போலவே, இந்தியிலும் இத்திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து சிங்கம் இரண்டாம் பாகம் சிங்கம் ரிட்டன்ஸ் என்ற பெயரில் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனால், சிங்கம் 2 படத்தை ரீமேக் செய்யாமல் புதிய கதையை வைத்து இப்படத்தை தயாரித்தனர். இத்திரைப்படம் கலவையான விர்சனங்கள் பெற்றன. இதையடுத்து, மீண்டும் சிங்கம் அகெயன் என்ற பெயரில் இதன் மூன்றாம் பாகத்தை இயக்குகிறார் ரோஹித் ஷெட்டி.

இப்படத்தில் அஜய் தேவ்கனுடன் ரன்வீர் சிங், அக்‌ஷய் குமார் ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர். படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகின. இதில் படத்தில் நடிக்கும் அனைவரும் பங்கேற்றனர். இத்திரைப்படத்தில் நாயகியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். காவல் அதிகாரியாக தீபிகாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் அஜய் தேவ்கன் காயம் அடைந்துள்ளார். ஆக்‌ஷன் காட்சியின் படப்பிடிப்பின்போது, அவருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவர்களின் சிகிச்சைக்கு பிறகு அவர் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பினார்.

MUST READ