Homeசெய்திகள்சினிமாகே ஜி எஃப் 3 இல் அஜித் நடிக்கவில்லை...... சுரேஷ் சந்திரா பேட்டி!

கே ஜி எஃப் 3 இல் அஜித் நடிக்கவில்லை…… சுரேஷ் சந்திரா பேட்டி!

-

நடிகர் அஜித் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 60 படங்களுக்கும் அதிகமாக நடித்திருக்கும் நிலையில் கடைசியாக இவர் துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். கே ஜி எஃப் 3 இல் அஜித் நடிக்கவில்லை...... சுரேஷ் சந்திரா பேட்டி!இதைத்தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட தற்போது படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. அதேசமயம் அஜித், மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 63வது படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆனார். குட் பேட் அக்லி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நிறைவடைந்தது. விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. மேலும் சமீபகாலமாக அஜித்தின் 64வது படம் குறித்தும் 65 ஆவது படம் குறித்தும் சில தகவல்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி அஜித்தின் 64வது படத்தை சிறுத்தை சிவா இயக்கப் போவதாக சொல்லப்பட்டது. பின்னர் அஜித்தின் 65 ஆவது திரைப்படத்தை கே ஜி எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கப் போவதாகவும் கே ஜி எஃப் 3 படத்தில் அஜித் நடிக்க போவதாகவும் தகவல்கள் வெளியானது. கே ஜி எஃப் 3 இல் அஜித் நடிக்கவில்லை...... சுரேஷ் சந்திரா பேட்டி!இது தொடர்பாக இயக்குனர் பிரசாந்த் நீல், நடிகர் அஜித்தை சந்தித்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா சமீபத்தில் நடந்த பேட்டியில், எதிர்காலத்தில் நடிகர் அஜித் பிரசாந்த் நீல் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் பிரசாந்த் நீல், அஜித்தை சந்தித்தது உண்மைதான் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கே ஜி எஃப் 3 படத்தில் யாஷுடன் இணைந்து அஜித் நடிக்க போகும் தகவல் உண்மை இல்லை எனவும் கூறியுள்ளார்.

MUST READ