Homeசெய்திகள்சினிமாதிடீரென அஜர்பைஜானிலிருந்து சென்னை திரும்பிய அஜித்!

திடீரென அஜர்பைஜானிலிருந்து சென்னை திரும்பிய அஜித்!

-

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி போன்ற இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார். திடீரென அஜர்பைஜானிலிருந்து சென்னை திரும்பிய அஜித்!ஏற்கனவே குட் பேட் அக்லி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. அதற்கு முன்னதாக அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆனார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவிலும் அனிருத்தின் இசையிலும் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஜித், அர்ஜுன், திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். மங்காத்தா படத்திற்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக இருந்து வருகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே 70% நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து சிறிய இடைவெளிக்கு பின்னர் சமீபத்தில் இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கப்பட்டது. கார் சாகச காட்சிகளுடன் இந்த படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் பட குழுவினரால் வெளியிடப்பட்டது. அது மட்டும் இல்லாமல் அஜித்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் திரிஷா விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் அஜித், தனிப்பட்ட காரணங்களுக்காக தற்போது அஜர்பைஜானில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்பில் இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. விமான நிலையத்திலிருந்து வெளியில் வரும் அஜித்தை காண ரசிகர்கள் பலரும் சூழ்ந்து நிற்கின்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

MUST READ