தமிழ் சினிமாவில் இயக்குனர் அட்லீ ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அடுத்தது இவர் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி விட்டார். இதைத் தொடர்ந்து இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக சமீப காலமாக தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதன்படி இவர்களது கூட்டணியில் உருவாகும் புதிய படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க போவதாகவும் இப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகப் போவதாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் அல்லு அர்ஜுன் இரட்டை வேடங்களில், அதாவது ஹீரோ மற்றும் வில்லனாக நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது. மேலும் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தது இந்த படத்தின் படப்பிடிப்புகள் 2025 ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் எனவும் சொல்லப்படுகிறது. தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இயக்குனர் அட்லீ இந்த படத்தை பேரலல் கான்செப்ட்டில் ஆக்சன் என்டர்டெயினர் படமாக எடுக்க திட்டமிட்டு இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -