பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீ. அதன் பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு, இறுகப்பற்று ஆகிய படங்களை நடித்திருந்தார். இதற்கிடையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
இந்நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் ஸ்ரீயின் ஆபாச வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது அந்த வீடியோவில் அவர் மெலிந்த தோற்றத்தில் பார்ப்பதற்கே பரிதாபமாக காணப்பட்டார். ஆகையினால் இவருடைய இந்த நிலைமைக்கு என்ன காரணம்? என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். அதாவது ஸ்ரீ நடித்த படத்திற்காக அவருக்கு பணம் கொடுக்கவில்லை. அவரை ஏமாற்றிவிட்டார்கள். இதனால் மன அழுத்தத்தில் இருந்த ஸ்ரீ தனியாக தான் வாழ்ந்து வந்த நிலையில் தற்போது எந்த நிலைமைக்கு ஆளாகியுள்ளார் என்று அவருடைய நெருங்கிய நண்பர்கள் இது தொடர்பாக கூறி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ஸ்ரீயின் இந்த பரிதாப நிலைக்கு, வில் அம்பு மற்றும் இறுகப்பற்று ஆகிய படங்களில் தயாரிப்பாளர்கள் தான் காரணம் என்று புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இந்த தயாரிப்பாளர்கள் தான் ஸ்ரீக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாகவும் கடைசியில் அவரை முட்டாளாக்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
- Advertisement -