Homeசெய்திகள்சினிமாபிரம்மாண்ட பட்ஜெட் படத்தில் நடிக்கும் ஆர்யா.... வெளியான புதிய தகவல்!

பிரம்மாண்ட பட்ஜெட் படத்தில் நடிக்கும் ஆர்யா…. வெளியான புதிய தகவல்!

-

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். ஆரம்பத்தில் இவர் சிறிய பட்ஜெட் படங்களில் நடித்திருந்தாலும் பாலா இயக்கத்தில் இவர் நடித்திருந்தால் நான் கடவுள் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பிரம்மாண்ட பட்ஜெட் படத்தில் நடிக்கும் ஆர்யா.... வெளியான புதிய தகவல்!தொடர்ந்து ராஜா ராணி, ஆரம்பம் என பல வெற்றி படங்களில் நடித்திருந்தார். கடைசியாக இவர், பா ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். குத்துச்சண்டை சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து ஆர்யா மிஸ்டர் எக்ஸ் எனும் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து நடித்திருக்கிறார். அதேசமயம் பா ரஞ்சித், அட்டகத்தி தினேஷ் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிகர் ஆர்யா வில்லனாக நடிக்கிறார் என்று ஏற்கனவே சமூக வலைதளங்களில் செய்திகள் கசிந்தது. இந்நிலையில் நடிகர் ஆர்யா சைலன்டாக, கிட்டத்தட்ட 75 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறாராம். இந்த படத்தினை ரன் பேபி ரன் படத்தில் இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்குகிறார். பிரம்மாண்ட பட்ஜெட் படத்தில் நடிக்கும் ஆர்யா.... வெளியான புதிய தகவல்!இந்த படமானது ஆர்யா இதுவரை நடித்த படங்களிலேயே மிகவும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறதாம். பீரியாடிக் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ராம்நாடு போன்ற பகுதிகளில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படமானது தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறதாம். எனவே படம் தொடர்பான அடுத்தடுத்து அப்டேட்கள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ