Homeசெய்திகள்சினிமாபா. ரஞ்சித் இயக்கத்தில் வில்லனாக களமிறங்கும் நடிகர் ஆர்யா!

பா. ரஞ்சித் இயக்கத்தில் வில்லனாக களமிறங்கும் நடிகர் ஆர்யா!

-

பா. ரஞ்சித் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் நடிகர் தினேஷ் நடிப்பில் அட்டகத்தி எனும் திரைப்படத்தை இயக்கி தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். பா. ரஞ்சித் இயக்கத்தில் வில்லனாக களமிறங்கும் நடிகர் ஆர்யா!அதைத் தொடர்ந்து மெட்ராஸ் படத்தை இயக்கி முக்கியமான இயக்குனராக மாறினார் பா ரஞ்சித். அதன் பின்னர் ரஜினியை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்க கபாலி, காலா போன்ற படங்களை இயக்கி பெயர் பெற்றார். இவ்வாறு தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த பா ரஞ்சித், ஆர்யா நடிப்பில் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை இயக்கினார். குத்துச்சண்டை சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த ரசிகர்களின் பேராதரவை பெற்றதை தொடர்ந்து சார்பட்டா பரம்பரை 2 திரைப்படத்தையும் இயக்க உள்ளார். இதற்கிடையில் விக்ரம் நடிக்கும் தங்கலான் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. பா. ரஞ்சித் இயக்கத்தில் வில்லனாக களமிறங்கும் நடிகர் ஆர்யா!அடுத்ததாக பா. ரஞ்சித், மீண்டும் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு தங்கலான் படத்திற்கு ரிலீசுக்கு பின்னர் தொடங்கப்பட இருந்தது. ஆனால் தங்கலான் படமானது தொடர்ந்து தள்ளிப் போவதால் விரைவில் தனது அடுத்த படத்தை தொடங்க இருக்கிறார் பா. ரஞ்சித். ஆகையால் அட்டகத்தி தினேஷ், பா ரஞ்சித் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. பா. ரஞ்சித் இயக்கத்தில் வில்லனாக களமிறங்கும் நடிகர் ஆர்யா!இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த படத்தில் நடிகர் ஆர்யா வில்லனாக நடிக்க இருப்பதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் ஆர்யா தற்போது மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ