Homeசெய்திகள்சினிமா'கோட்' படத்திலிருந்து விரைவில் வெளியாகும் நீக்கப்பட்ட காட்சி.... வெங்கட் பிரபு!

‘கோட்’ படத்திலிருந்து விரைவில் வெளியாகும் நீக்கப்பட்ட காட்சி…. வெங்கட் பிரபு!

-

விஜய் நடிப்பில் உருவாகி இருந்த கோட் (THE GREATEST OF ALL TIME) திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. கிட்டத்தட்ட 5000க்கும் அதிகமான திரைகளில் திரையிடப்பட்ட இந்தப் படத்தைக் காண ரசிகர்கள் பலரும் திரையரங்குகளுக்கு மிகுந்த ஆவலுடன் திரண்டு வந்தனர்.'கோட்' படத்திலிருந்து விரைவில் வெளியாகும் நீக்கப்பட்ட காட்சி.... வெங்கட் பிரபு! வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த படம் காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. அதிலும் அழகிய தமிழ் மகன் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் ஹீரோவாகவும் வில்லனாகவும் மிரட்டி இருந்தார். மேலும் தமிழ் மொழி மட்டுமல்லாமல் அனைத்து மொழி ரசிகர்களிடமும் இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. அந்த வகையில் ஒரே நாளில் இந்த படம் 126 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் படத்தில் கேப்டன் விஜயகாந்த், திரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோரின் கேமியா ரோல்களும் தோனி, சூர்யா, தல அஜித் ஆகியோர்களின் குறியீடுகள் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுத்தது. மேலும் கிளைமாக்ஸில் வில்லனான மைக் மோகனை நடிகர் விஜய், சிவகார்த்திகேயன் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு செல்வது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கும்.'கோட்' படத்திலிருந்து விரைவில் வெளியாகும் நீக்கப்பட்ட காட்சி.... வெங்கட் பிரபு! அதன் பின்னர் வில்லன் மோகனுக்கு என்ன நடந்தது என்பதை காட்டாமலேயே படம் முடிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் வெங்கட் பிரபு சமீபத்தில் நடந்த பேட்டியில் சிவகார்த்திகேயன் மற்றும் மைக் மோகன் இருவருக்கும் இடையிலான காட்சி நீக்கப்பட்ட காட்சியாக விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். அதேசமயம் இந்த காட்சி சிறப்பான காட்சியாக இருக்கும் என்று வெங்கட் பிரபு கூறியிருப்பது மேலும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

MUST READ