போர் தொழில் இயக்குனரின் அடுத்த படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் போர் தொழில் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார். இந்த படம் தரமான கிரைம் திரில்லர் படமாக அமைந்து ராட்சசன் படத்திற்கு பிறகு பெரிய அளவில் பேசப்பட்டது. எனவே இதைத்தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் ராஜா என்ன படம் இயக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. அதன்படி இவர், தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார் என கடந்த சில மாதங்களாகவே பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அதே சமயம் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தை வேல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி 2025 ஜூன் முதல் வாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் தனுஷ், குபேரா, இட்லி கடை ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கும் நிலையில் தேரே இஷ்க் மெய்ன் என்ற இந்தி திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.