Homeசெய்திகள்சினிமாஇளையராஜா பயோபிக் படப்பிடிப்பு... தனுஷ் வைத்த கோரிக்கை...

இளையராஜா பயோபிக் படப்பிடிப்பு… தனுஷ் வைத்த கோரிக்கை…

-

இளையராஜாவின் பயோபிக் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில், நடிகர் தனுஷ் புதிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

கோலிவுட் சினிமாவில் தொடங்கி டோலிவுட், பாலிவுட், அடுத்து ஹாலிவுட்டுக்கும் சென்று இன்று உலக சினிமாவின் நாயர்களில் ஒருவராக மாறியிருக்கும் வெற்றி கதாநாயகன் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் கேப்டன் மில்லர். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி இருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கும் புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, ராயன் என்ற படத்தை இயக்கி நடித்திருக்கிறார். இதில், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தியில் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கும் திரைப்படங்களில் தனுஷ் நடிக்க உள்ளார். இந்நிலையில் இளையராஜா பயோபிக்கிலும் தனுஷ் நடிக்கிறார். பிரபல இந்தி திரைப்பட இயக்குநர் ஆர்.பால்கி இப்படத்தை இயக்க இருந்த நிலையில், அவர் படத்திலிருந்து விலகவே, இத்திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இத்திரைப்படத்தின் வேலைகள் வேகம் எடுக்கத் தொடங்கி விட்டன.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில், நடிகர் தனுஷ் புதிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதன்படி, முதல்நாள் படப்பிடிப்பின்போது இளையராஜா அங்கு வந்து தன்னை ஆசிர்வதிக்க வேண்டும் என்று தனுஷ் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு இளையராஜாவும் சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

MUST READ