நடிகர் தனுஷின் சூப்பர் ஹிட் பாலிவுட் படம் ரீ ரிலீஸாக உள்ளது.
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர். அந்த வகையில் ஏகப்பட்ட படங்களில் பிசியாக நடித்து வரும் தனுஷ் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை இயக்கியும் வருகிறார். அந்த வகையில் இவரது இயக்கத்தில் உருவாகியிருந்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் நேற்று (பிப்ரவரி 21) திரைக்கு கொண்டுவரப்பட்டது. அடுத்தது 2025 ஏப்ரல் 10ஆம் தேதி தனுஷின் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவாகி வரும் இட்லி கடை திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இதற்கிடையில் தனுஷ், ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மெய்ன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து கிரித்தி சனோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் டெல்லியில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் இப்படமானது 2025 நவம்பர் 28ஆம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான ராஞ்சனா (தமிழில் அம்பிகாபதி) திரைப்படம் கிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப் பிறகு வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவினர் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட இருக்கும் தகவலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.