நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் தமிழில் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து வியாபாரி, பையா, அயன், சிறுத்தை, வீரம் என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். கடைசியாக இவர் தமிழில் அரண்மனை 4 திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது ஜெயிலர் 2 திரைப்படத்தில் தமன்னா நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் நடிகை தமன்னா, விஜய் வர்மாவை காதலித்து வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.
அதன்படி கடந்த 3 வருடங்களாக இருவரும் உருகி உருகி காதலித்து வந்த நிலையில் சமீபகாலமாக இருவரும் பிரேக் அப் செய்து விட்டனர் என்றும் சமூக வலைதளங்களில் பல தகவல்கள் தீயாய் பரவியது. இருப்பினும் இருவருமே இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் தமன்னா மற்றும் விஜய் வர்மா ஆகிய இருவரும் ஒரே இடத்தில் ரவீனா டாண்டன் இல்லத்தில் ஹோலி கொண்டாடியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆனால் ஹோலி கொண்டாட்டத்தில் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. எனவே இதன் மூலம் தமன்னா – விஜய் வர்மா பிரேக் அப் செய்தி உண்மையா? இல்லை வதந்தியா? என்பது போன்ற சந்தேகங்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
- Advertisement -