Homeசெய்திகள்சினிமாஅவரது அப்பாவை விட கடினமாக உழைக்கிறார்.... துருவ் விக்ரம் குறித்து மாரி செல்வராஜ்!

அவரது அப்பாவை விட கடினமாக உழைக்கிறார்…. துருவ் விக்ரம் குறித்து மாரி செல்வராஜ்!

-

இயக்குனர் மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் குறித்து பேசியுள்ளார்.அவரது அப்பாவை விட கடினமாக உழைக்கிறார்.... துருவ் விக்ரம் குறித்து மாரி செல்வராஜ்!இயக்குனர் மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய படங்களுக்கு பிறகு பைசன் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் இவருடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. நிவாஸ் கே பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். துருவ் விக்ரமின் மூன்றாவது படமான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. மேலும் இதன் படப்பிடிப்பு கடந்த மே மாதம் பூஜையுடன் தொடங்கப்பட்டு சென்னை, நெல்லை போன்ற பல பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அவரது அப்பாவை விட கடினமாக உழைக்கிறார்.... துருவ் விக்ரம் குறித்து மாரி செல்வராஜ்!அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட 70% நிறைவடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் துருவ் விக்ரம் குறித்து பேசியுள்ளார். “துருவ் விக்ரம் என்னை நம்பி கடந்த இரண்டு வருடங்களாக வேறு எந்த படத்திலும் கமிட்டாகவில்லை. அவர் அவரது அப்பா விக்ரமை விட கடினமாக உழைக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ