தீண்டாமை கொடுமையை அனுபவித்தேன்… இயக்குநர் பா ரஞ்சித் ஆதங்கம்…
- Advertisement -
தீண்டாமை கொடுமையை தானும் அனுபவித்ததாக பிரபல இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
![]()
தவிர்க்க முடியாக இயக்குநராக தமிழ் சினிமாவில் உருவெடுத்துள்ளார் இயக்குநர் பா ரஞ்சித். கோலிவுட்டில் அட்டக்கத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பா ரஞ்சித். இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக சென்னை-28 திரைப்படத்தில் பணியாற்றினார். பீல் குட், விளையாட்டுத்தனமாக திரைப்படங்களை இயக்கும் வெங்கட் பிரபுவின் பட்டறையிலிருந்து வெளிவரும் இயக்குநர்கள் விளையாட்டாய் திரைப்படம் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டதை உடைத்து, அட்டகத்தி படத்தில் தலித் அரசியலை பேசியிருப்பார் பா ரஞ்சித்.
![]()
அடுத்ததாக இயக்கிய மெட்ராஸ் திரைப்படத்தில் சுவற்றை சுற்றி நடக்கும் அரசியலை காட்சிப்படுத்தினார். ரஜினிகாந்தை முழுக்க முழுக்க வயதான தோற்றத்தில் நடிக்க வைத்து புதுமையை புதுத்தினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்புக்கு தீனி போடும் வகையில் கபாலி படத்தின் கதையை அமைத்தார் பா ரஞ்சித். தொடர்ந்து, ரஜினிகாந்தை வைத்து காலா படத்தையும் இயக்கினார் பா.ரஞ்சித். தற்போது தங்கலான் படத்தை இவர் இயக்கி முடித்திருக்கிறார்.
![]()
இந்நிலையில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பிறந்த ஊரிலேயே தீண்டாமை கொடுமையை அனுபவித்தேன் என்று தெரிவித்துள்ளார். சென்னை ஆவடி அருகே உள்ள கரளப்பாக்கத்தில் பிறந்த அவர், நான் ஒரு தலித் என்பதால் திரௌதி அம்மன் கோயிலில் தன்னை அனுமதிக்கவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தார். மேலும், அந்த தீண்டாமை கொடுமை தனக்கு பிடிக்காததால், அதன்பிறகு அந்த கோயில் திருவிழாவில் பங்கேற்பதே இல்லை என்றும் கூறினார்.