Homeசெய்திகள்சினிமாஎனக்கு ஆண்கள் பிடிக்காதுனு நினைச்சுக்காதீங்க... வெளிப்படையா பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்!

எனக்கு ஆண்கள் பிடிக்காதுனு நினைச்சுக்காதீங்க… வெளிப்படையா பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்!

-

- Advertisement -

PVR நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரான மீனா சாப்ரியா தனது  வாழ்க்கையை சுயசரிதையாக UNSTOPPABLE  என்ற பெயரில் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.

ஐநாக்ஸ் நிறுவனத்தில் 8000 ரூபாய் சம்பளத்தில் தனது வாழ்க்கையைத் துவங்கிய மீனா சாப்ரியா தற்போது பிவிஆர் குழுமத்தின் தெற்கு மண்டலத் தலைவர் என்ற என்ற உயரத்தை அடைந்துள்ளார். UNSTOPPABLE ANGELS என்ற இயக்கத்தின் மூலம் பல பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் உதவி வருகிறார்.

மீனா சாப்ரியாவின் UNSTOPPABLE புத்தக வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ், சினேஹா நாயர், மைக்செட் ஶ்ரீராம், ஆட்டோ அண்ணாதுரை, தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

அதில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்,

இந்த புத்தகத்தையும் மீனாவின் கதையை பற்றியும் தெரியாமல் எப்படி இந்த விழாவுக்கு வருவது  என்று யோசித்தேன். பின்பு மீனாவைத் தொடர்பு கொண்டு, அவரின் கதையைக் கேட்டேன். எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.

17 வயதில் திருமணமாகி, 20 வயதில் விவாகரத்து பின்னர் 2 குழந்தைகளை வைத்துக்கொண்டு ஒரு பெண் இத்தனை உயரத்திற்குச் செல்ல முடியுமா என்று சிந்தித்த போது, எனக்கு என் அம்மா தான் நினைவுக்கு வந்தார்.

சினிமாவுக்கு நான் வந்த ஆரம்ப கட்டத்தில், “நீயெல்லாம் என்ன செய்யப் போகிறாய்” என்று பலரும் குறை சொல்லி வந்தார்கள். ஆனால், அதையெல்லாம் கடந்து வந்ததற்கு நாங்கள் UNSTOPPABLEஆக இருப்பது தான் காரணம்.

அதையே மீனா அவர்கள் புத்தகத்தின் தலைப்பாக வைத்துள்ளார். இந்தப் புத்தகம் பெரிய அளவில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

நான் புத்தகம் படிப்பது கம்மி தான். படத்தின் ஸ்கிரிப்ட் தான் அதிகம் படிப்பேன். இந்தப் புத்தகம் படிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

நான் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதால் எனக்கு ஆண்கள் பிடிக்காது என நினைத்து கொள்ள வேண்டாம். என்னைப் பெண்ணியவாதியா என்று கூட கேட்டார்கள், அதெல்லாம் கிடையாது. ஆண்களிலும் தவறானவர்கள் உள்ளனர், பெண்களிலும் தவறானவர்கள் உள்ளனர்” என்று பேசினார்.

MUST READ