Homeசெய்திகள்சினிமாதனுஷ் இயக்கும் புதிய படத்தில் நடிகர் அருண் விஜய்.... என்ன ரோல் தெரியுமா?

தனுஷ் இயக்கும் புதிய படத்தில் நடிகர் அருண் விஜய்…. என்ன ரோல் தெரியுமா?

-

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். தனுஷ் இயக்கும் புதிய படத்தில் நடிகர் அருண் விஜய்.... என்ன ரோல் தெரியுமா?இவரது நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தினை தனுஷே இயக்கியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நடிகர் தனுஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான பவர் பாண்டி எனும் திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார். அதைத்தொடர்ந்து இவர் இயக்கியிருந்த ராயன் திரைப்படமும் பிரம்மாண்ட வெற்றி கண்டது. தனுஷ் இயக்கும் புதிய படத்தில் நடிகர் அருண் விஜய்.... என்ன ரோல் தெரியுமா?அதன் பின்னர் இவர் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் ரொமான்டிக் காதல் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷ் புதிய படம் ஒன்றை இயக்கி நடிக்க போவதாகவும் அந்த படத்தில் நடிகர் அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போவதாகவும் சமீபத்தில் செய்திகள் பரவி வந்தன. தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், நடிகர் அருண் விஜய் இந்த படத்தில் வில்லனாக நடிக்கப் போகிறாராம். அருண் விஜய் ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் இயக்கும் புதிய படத்தில் நடிகர் அருண் விஜய்.... என்ன ரோல் தெரியுமா?அடுத்தது மேலும் இந்த படத்தில் அசோக் செல்வன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் எனவும் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதே சமயம் இந்த படம் கிட்டத்தட்ட 120 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்து அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ