Homeசெய்திகள்சினிமா'சூர்யா 45' படத்தில் இணைந்த இரண்டு கதாநாயகிகள்.... யார் யார் தெரியுமா?

‘சூர்யா 45’ படத்தில் இணைந்த இரண்டு கதாநாயகிகள்…. யார் யார் தெரியுமா?

-

சூர்யா 45 படத்தில் மேலும் இரண்டு கதாநாயகிகள் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.'சூர்யா 45' படத்தில் இணைந்த இரண்டு கதாநாயகிகள்.... யார் யார் தெரியுமா?

நடிகர் சூர்யா நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அடுத்ததாக நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் கமிட்டாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கும் என அப்டேட் கிடைத்திருக்கிறது. இதற்கிடையில் நடிகர் சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியிருக்கிறார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. அதன்படி சூர்யா 45 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க போவதாகவும் ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படமானது கிராமத்து கதைக்களத்தில் உருவாகப் போவதாகவும் இந்த படத்திற்கு ஹின்ட் என்று தலைப்பு வைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன. 'சூர்யா 45' படத்தில் இணைந்த இரண்டு கதாநாயகிகள்.... யார் யார் தெரியுமா?இந்நிலையில் தான் இந்த படத்தின் கதாநாயகிகள் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. அதாவது சமீபத்தில் சூர்யா 45 படத்தில், சிவப்பு மஞ்சள் பச்சை, பிடி சார் ஆகிய படங்களில் நடித்திருந்த காஷ்மிரா பர்தேசி கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்று புதிய தகவல்கள் வெளிவந்தன. அதைத்தொடர்ந்து தற்போது சீதாராமம் பட நடிகை மிர்ணாள் தாகூர் மற்றும் SK 23 படத்தில் நடித்து வரும் ருக்மினி வசந்த் ஆகியோரும் சூர்யா 45 படத்தில் நடிக்கப் போகிறார்கள் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ